states

img

ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் தீவிரவாதிகளால் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

புதுதில்லி மே 7- ஜம்மு காஷ்மீர் ரஜோரி-பூஞ்ச் செக்டார்  பகுதியில் தீவிரவாதிகளால் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பிர் பஞ்சால் பள்ளத்தாக்  கில் உள்ள ரஜோரி-பூஞ்ச் செக்டாரின் கண்டி  பகுதி அடர்ந்த காடுகளை கொண்டது. இந்த பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 5) காலை 7:30 மணியளவில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச்சண்டையில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் பலத்த காயத்துடன் உதம்பூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

15 நாட்கள் என்ன செய்தது ராணுவம்?

கடந்த ஏப்ரல் 20 அன்று ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்  திய கையெறி குண்டு தாக்குதலில் 5 ராணுவ  வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) என்ற அமைப்பு தனது  இணையத்தில்,”நீங்கள் எங்கள் பதுங்கி யிருக்கும் இடங்களுக்குள் சென்றீர்கள். அத னால் நாங்கள் உங்களைக் கொன்றோம், நாங்  கள் இங்கே இருக்கிறோம் என்பது உலகுக்குத்  தெரியும்.நாங்கள் வெல்வோம்” எனக் கூறி யது. “நாங்கள் இங்கே இருக்கிறோம்” என  15 நாட்களுக்கு முன்னரே மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி வெளிப்படையாக அறி வித்தும், 2 வார காலம் (15 நாட்கள்) தொடர் தேடு தல் வேட்டையில் ராணுவம் என்ன செய்தது எனத் தெரியவில்லை. ஆனால் மீண்டும் 5 ராணுவ வீரர்கள் உயிரை விட்டுள்ளனர்.

பொதுமக்களிடம் அடாவடி

ரஜோரி தாக்குதல் தொடர்பாக இன்னும்  தீவிரவாதிகளின் இருப்பிடத்தை கண்டறிய வில்லை. அதற்கான தேடுதல் வேட்டையில் ராணுவம் இறங்கியுள்ள நிலையில், தாக்கு தல் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள உள்ளூர்வாசி கள் 100-க்கும் மேற்பட்டோரை விசாரணை என்ற பெயரில் கைது செய்துள்ளது ராணுவம்.

தீவிரவாதிகள் உடல்கள் எங்கே?

ரஜோரி தாக்குதலுக்கு ராணுவ வீரர்களின் பதில் தாக்குதல் தொடுத்ததில் பல தீவிரவாதி கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள் ளது. ஆனால் இதுவரை ஒரு சடலம் கூட  மீட்கப்படவில்லை. ஆனால் இரண்டு முதல்  நான்கு தீவிரவாதிகள் அப்பகுதியில் இன்னும்  பதுங்கியிருக்கலாம் என ராணுவத் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பா?

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளி யுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கோவா மாநிலத்திற்கு வருகை தந்தார். வந்தி ருந்த ஒரு நாளில் ரஜோரி தாக்குதல் சம்பவம்  நடந்துள்ளது. மேலும் மாநாட்டில் தீவிர வாதம் குறித்து பிலாவல் பூட்டோவிடம் இந்  தியா கடுமையாக கேள்வி எழுப்பியது.

கடினமாக இருக்கும்  தேடுதல் வேட்டை 

தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து  கொண்டிருக்கும் கண்டி வனப்பகுதி செங்குத்  தான பாறைகளால் அடர்த்தியான தாவரங்கள் நிறைந்ததாக இருப்பதால் தீவிரவாதிகளை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கண்டி காடுகளின் குகையின் அருகே தீவிர வாதிகளின் வெடிகுண்டு சாதனம் கண்டெ டுக்கப்பட்டுள்ள நிலையில், அருகிலுள்ள கூடு தல் குழுக்களை தாக்குதல் நடந்த ரஜோரி பகு திக்கு ராணுவம் அனுப்பியுள்ளது.

தாக்குதல் வளையமாக  மாறும் ரஜோரி

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். கடந்த  ஆண்டு பூஞ்ச்-ரஜோரி செக்டார் வனப்பகுதி களில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் 12-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் கொல்  லப்பட்டனர். கடந்த ஜனவரி 1 அன்று ரஜோரி யின் தாங்ரி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூ கத்தை தீவிரவாதிகள் தாக்கியதில் ஒரே  கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்ட னர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நட மாட்டம் இல்லை, மக்கள் நிம்மதியாக இருக்கி றார்கள் என ஒன்றிய அரசு வீரவசனங்களை முழங்கினாலும் ஆகஸ்ட் 5, 2019 முதல் ஜம்மு காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பாதுகாப்புப் படையினர் உட்பட 37 பேர் கொல்லப்பட்டதாக அதிகா ரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் ரஜோரி-பூஞ்ச் செக்டார் பகுதியில் தீவிரவாதிகளால் 5 ராணுவ வீரர் கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்  செயலாளர்  கடும் கண்டனம் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்  கத்தில்,”ஜம்முவின் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் தீவிரவாதிகளால் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்  கொல்லப்பட்ட இந்த சம்பவத்திற்கு கடும்  கண்டனம். ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதா பங்கள்” எனக் கூறியுள்ளார்.